அமெரிக்கா நடத்தும், RIMPAC-2018 என்ற பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த, 25 கொமாண்டோக்கள், அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.
26 நாடுகள் பங்கேற்கும், RIMPAC-2018 கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம், ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து, அமெரிக்காவின் பேர்ள் துறைமுகம், ஹொனொலுலு, மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் இந்த கூட்டு பயிற்சி இடம்பெறுகிறது.
இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சியில் முதல் முறையாக இலங்கை கடற்படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மரைன் படைப்பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 25 கொமாண்டோக்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க கடந்த மே 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த கூட்டுப் பயிற்சி ஈரூடக நடவடிக்கைகள் நகரப் புற நடவடிக்கைகள் சூட்டுப் பயிற்சிகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM