அமெரிக்காவின் மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு, உடன் பிறந்தவர்களான இரண்டு தமிழர்கள் போட்டியிடுவதாக, பால்ரிமோர் மகசின் என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேரிலன்ட் மாகாண ஆளுநர் பதவிக்கு, கிரிசாந்தி விக்னராஜா என்ற பெண் போட்டியிடுகிறார். அவரது சகோதரரான திரு எனப்படும் திருவேந்திரன், அதே மாகாணத்தின், பால்ரிமோர் நகர அரச சட்டவாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
கிரிசாந்தி முன்னர், வெள்ளை மாளிகையில் மிச்சேல் ஒபாமாவின் கொள்கை பணிப்பாளராக இருந்தவர்.
கிரிசாந்தியும் அவரது அண்ணன் திருவும், குழந்தைகளாக இருந்தபோது, அவரது பெற்றோர், இலங்கையிலிருந்து போரினால் இடம்பெயர்ந்து, பால்ரிமோர் நகரில் குடியேறினர்.
இவர்களின் பெற்றோர் பால்ரிமோர் நகர பாடசாலையில் ஆசிரியர்களாக பணியாற்றினர்.
ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற திரு, ‘ஹவார்ட் லோ ரிவியூ’ இத ழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அவரது சகோதரியான கிரிசாந்தி யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்தார். இவர்கள் இருவரும் இப்போது மேரி லன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கியமான பதவிகளுக்காக ஜனநாயக கட்சி சார் பில் போட்டியிடுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM