(நா.தினுஷா)
மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய அனைவரினதும் தகவல்கள் வெளியிட வேண்டும் என தெரிவித்த கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், பிணைமுறி விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் தொடர்பிலும் நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது பேர்ப்பர்ச்சுவல் நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விடயங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கை 118 என வரையருக்க முடியாது. இத்தொகை 164 விட அதிகமானதாகவே அமைய வேண்டும். காரணம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி ஊடகங்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் இதில் தொடர்புபட்டுள்ளனர்.
கோப் குழு வெளியிட்டுள்ள பிணைமுறி விவகார அறிக்கை முழுமையானது அல்ல. எனவே முழுமையான அறிக்கையை கோப் குழு வெளியிட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM