துப்பாக்கிகளை வைத்திருந்த இரு சந்தேகநபர்கள் கஹவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஹவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கஹவத்தை அட்டகலபன்ன பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு ரிவோல்வர் வகை துப்பாக்கி ஒன்றும் டி 56 ரக துப்பாக்கியின் 03 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கி கைது செய்யப்பட்ட சந்தேக நபரால் தயாரிக்கப்பட்டதென்று தெரிய வந்துள்ளது.
அதேவேளை சந்தேகநபரால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த மற்றொரு நபர் கஹவத்தை - கஹவத்துகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 35 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM