(எம்.எப்.எம்.பஸீர்)
நீதிமன்றை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் அடங்கிய காணொளியை மேலோட்டமாக பார்க்கும் போதே அது நீதிமன்றை அவமதிக்கும் வகையில் உள்ளதை அவதானிக்க முடிவதாக சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
முன்னதாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சுனில் குமார ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.
அம் மனுவில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரஞ்சன் ராமநாயக்க, இந்த நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள், நீதிபதிகள் ஊழல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
குறித்த கருத்துக்களின் உள்ளடக்கம் நீதிமன்றை அவமதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவான ஊடாக நீதிமன்றுக்கு அறிவித்தார்.
அதனால் இந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து விசாரிக்க வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவான நீதிமன்றிடம் கோரினார். நீதியர்சர்களான ஈவா வணசுந்தர, எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் உயர் நீதிமன்றில் பிரஸ்தாபித்தார்.
இந் நிலையில் இது குறித்த வழக்கை எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க மனுவை பிரதம நீதியரசரிடம் ஒப்படைத்ததாகவும் அறிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM