தென்கொரியாவிற்கான விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே பெண்ணொருவரின் இதழில் முத்தமிட்டமை பலத்த சர்ச்சை உண்டுபண்ணியுள்ளது.
தென்கொரிய தலைநகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.
அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிலிப்பைன்சை சேர்ந்த பணிப்பெண்களை ஜனாதிபதி மேடைக்கு அழைத்துள்ளார்.
அவர்களிடம் கத்தோலிக்க திருச்சபையை விமர்சிக்கும் நூலொன்றை வழங்கிய பின்னர் அதில் ஒரு பெண்ணை அழைத்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணின் இதழில் முத்தமிட விரும்புவதாக சைகை செய்துள்ள அவர் அந்த பெண்ணின் இதழில் பலத்த ஆராவாரத்திற்கு மத்தியில் முத்தமிட்டுள்ளார்.
இதன் பின்னர் அவர் அந்த பெண் திருமணம் செய்துகொண்டுவிட்டாரா? என கேட்டுள்ளார்.
இதேவேளை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினால் முத்தமிடப்பட்ட அந்த பெண் அவரின் நடவடிக்கையில் தீயநோக்கம் எதுவும் தென்படவில்லை எனவும் அங்குதிரண்டிருந்தவர்களை திருப்திப்படுத்தவே ஜனாதிபதி அவ்வாறு நடந்துகொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்து பிலிப்பைன்சின் அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் சமூகஊடகங்களும் விமர்சனங்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM