ஆட்சியாளர்கள் ஜனநாயக தன்மையுடன் செயற்பட வேண்டும் - சம்பிக்க

Published By: Vishnu

04 Jun, 2018 | 03:53 PM
image

(நா.தினுஷா)

அரசாங்கம் நவீனத்துவமிக்கதாகவும் ஜனநாயக தன்மைமிக்கதாவும் இருந்தால் மாத்திரமே நாட்டின் பொருளதார வளர்ச்சியின் உறுதிதன்மையினை பேணி பொருளாதாரத்தில் வளர்ச்சிகர நாடாக இலங்கை அடையாளம் காணப்படும்  என மாநகர மற்றும்  மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கையை விட பொருளாதார வளர்ச்சியில் ஏனைய நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஆனால் இலங்கை இதுவரையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக கருதபடுகின்றது. 1998 ஆம் ஆண்டு இலங்கை மத்தியத்தர நாடுகளில் ஒன்றாக அடையாளபடுத்தபட்டிருந்த போதிலும் பல போராட்டங்களின் மத்தியில் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றது. 

19 ஆம் நுற்றாண்டிலிருந்து உலகநாடுகள் அனைத்துறைகளிலும் வளர்ச்சியினை கண்டுவருகின்றன. வளர்ச்சியடைந்துவரும் உலக நாடுகளிடையே தொழில்நுட்ப வளர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ததாகும். 

இவ்வாறானதொரு நிலையில் எதிர்கால முன்னேற்றங்களுக்கு எமது சமூகத்தில் பொருளியலாளர்கள், வைத்தியர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கபடவேண்டும். இதற்கென மாநகர மற்றும்  மேல்மாகாண அபிவிருத்தி  அமைச்சு புதிய தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கியுள்ளது.

அரச நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றியமைக்க வேண்டுமானால் நவீனத்துவமான ஆட்சியொன்றினை நாட்டில் ஏற்படுத்த வேண்டும். அதன்மூலமே பொருளாதாரத்தில் முன்னேற்றத்தில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51