(ஆர்.யசி)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிருவாகக் குழு மாற்றப்பட வேண்டும் என்ற சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையிலும், தேசிய அரசாங்கத்தை விட்டு வெளியேற தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலும் ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் இன்று கூடுகின்றது.
செயற்குழு, நிறைவேற்றுக் குழு கூட்டமும் இன்றைய தினமே கூடுவதுடன் தற்காலிக புதிய நிருவாகக் குழு இன்று நியமிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள், நெருக்கடிகள் தொடர்ந்துகொண்டுள்ள நிலையில் கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் தற்காலிக நிருவாகக் குழு மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் பதவிகள் மாற்றப்பட வேண்டும் எனவும் கட்சிக்குள் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீனக் குழுவாக செயற்படும் 16 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றி எதிர்க்கட்சியாக செயற்பட அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் மிக முக்கிய மத்திய குழுக் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடுகின்றது. அதேபோல் அகில இலங்கை செயற்குழுக் கூட்டமும், கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் இன்றைய தினமே கூடி முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM