கினிக்தேன - நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் லோனக் கல்குவாரி பகுதியில் பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்ததில் பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளதாக நோட்டன் பிரீஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
மலையகத்தில் தொடர்ந்து பெய்த கடும் மழையின் காரணமாக இன்று(03-05-2018) அதிகாலை 2 மணி அளவில் இந்த பாரிய கல் சரிந்து விழுந்துள்ளதாகவும், இதனால் கினிகத்தேன - நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கினிகத்தேனையில் இருந்து நோட்டன் பிரீஜ் பகுதிக்கு செல்லும் வாகன சாரதிகள் லக்ஷபான கலுகொல்ல வழியாக நோட்டன் பிரீஜ் வழியாக மாற்று வீதியினை பயன்படுத்துமாறு நோட்டன் பிரீஜ் பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கோரியுள்ளனர்.
இதேவேளை மலையகத்தில் தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் ஊடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.
எனவே பொலிஸாரின் மறு அறித்தல் வரை, கினிகத்தேன நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டாமெனவும் பொலிஸார் கோரியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM