சவுதி அரேபியாவில் திரையரங்கத்தை திறந்துள்ளமை மற்றும் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளித்தமை தொடர்பாக அந்தாட்டு இளவரசர் பின் சல்மானுக்கு அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.
சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த திட்டங்களை மேற்டிகாண்டு வருகிறார். அந்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக திரையரங்கத்தை திறந்து சவுதியில் அதிகளவில் பொழுதுபோக்கு நிகழ்சிகளை நடத்த வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடையை நீக்கி பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கினார். இந்த திட்டங்கள் எல்லாம் பாவகரமான திட்டங்கள் எனக் கூறியுள்ள அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
‘முகமது பின் சல்மான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதற்கு பதிலாக, காரணமே இல்லாமல் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த நாத்திகம் மற்றும் மதச்சார்பற்றவர்களை பின்தொடர்வதால், சவுதியில் ஊழல் மற்றும் அறத்தை சிதைக்கும் போக்கு அதிகரித்துள்ளது’ என அல் கொய்தா அமைப்பின் செய்தி நிறுவனமான மதாத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு அருகில் உள்ள ஜெட்டா நகரில் (WWE) எனப்படும் மல்யுத்த போட்டிகள் இடம்பெற்றது. இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் குழுமியிருந்த இடத்தில் மல்யுத்த வீரர்கள் திறந்த உடலுடன் விளையாடியது கடும் கண்டனத்துக்குரியது”எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM