(லியோ நிரோஷ தர்ஷன்)
"மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புப்பட்ட நிறுவனத்திடமோ அல்லது நபர்களிடமோ பணம்பெற்றதாக கூறப்படுகின்ற 118 பேரின் பெயர்களை ஜனாதிபதி வெளியிடா விட்டால் அது நாட்டு மக்களுக்கும், எஞ்சிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் செய்யும் துரோகம் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வகையில் பணம் பெற்றுள்ளதாக கூறப்படும் 118 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடுமாறு சபாநாயகர் ஜனாதிபதி செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தெளிவுப்படுத்தும் போதே சமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
"இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியசுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் 118 பேரின் பெயர்களையும் வெளியிடுவது அவசியமாகும். இல்லை என்றால் 225 பேரும் சந்தேகத்திற்குரியவர்களாகி விடுவார்கள். ஆகவே அரசாங்கம் அவ்வாறானதொரு தவறினை செய்ய கூடாது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பட்டால் , அது குறித்து சபாநாயகர் சம்மந்தப்பட்ட தரப்பிடம் விளக்கம் கோரினால் தகவல்களை வழங்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணையின் இறுதியில் அறிக்கையை ஜனாதிபதியிடமே ஒப்படைக்கின்றது. இந் நிலையில் இறுதி தீர்மானம் ஜனாதிபதி வசமாகின்றது. அவர் விரும்பினால் அறிக்கையின் முழு விபரத்தையும் வெளியிட முடியாது .
யாரையேனும் பாதுகாக்க விரும்பினால் அல்லது அந்த அறிக்கையின் விடயங்களை வெளிப்படுத்த விரும்பாத பட்சத்தில் ஜனாதிபதியினால் வெளியிடாமல் இருக்க முடியும். ஏனென்றால் நிறைவேற்று அதிகாரம் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி என்பது நாட்டில் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இது குறித்த விசாரணைகளும் மக்களின் அவதானத்திற்கு உட்பட்ட விடயமாகும்.
எனவே குறித்த பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய நிறுவனத்திடமோ அல்லது நபர்களிடமோ பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற 118 பேரின் பெயர்களை வெளியிட வேண்டியது நல்லாட்சி அரசாங்கத்தின் கடப்பாடாகும். விசாரணை அறிக்கையில் குறித்த பெயர்கள் திட்டமிட்ட வகையில் மறைக்கப்பட்டிருந்தால் மக்கள் விரோத செயற்பாடாகும்." என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM