மன்னாரில் நடமாடும் தள்ளு வண்டியில் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டவரிடம் பெறப்பட்ட பெட்டிஸில் கரல் பிடித்த இரும்பு ஆணி ஒன்று நுகர்வோர் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வியாபாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
மன்னார் சின்னக் கடை பகுதியில் தள்ளு வண்டியில் நடமாடும் சேவையில் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒருவரிடம் நுகர்வோர் ஒருவர் பெட்டிஸ்கள் வாங்கியுள்ளார்.
அதில் ஒன்றில் கரல் பிடித்த ஆணி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மன்னார் பொது சுகாதார சௌக்கிய அதிகாரியிடம் அவற்றை காட்டி பொருளை வாங்கிய நுகர்வோரால் முறையீடு செய்யப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொது சுகாதார சௌக்கிய அதிகாரி சதாசிவம் சகாறோஐன் என்பவரால் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ் வழக்கு மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மன்றில் முறைப்பாட்டாளரும் சந்தேக நபரும் மன்றில் ஆஐராகி இருந்தனர்.
குற்றவாளி தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு நீதவான் 5000 ரூபா அபராதம் விதித்ததுடன் தடை விதிக்கப்படடிருந்த அவரின் தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளவும் கட்டளை பிறப்பித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM