(இராஜதுரை ஹஷான்)
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற விடயத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியினர் சமர்ப்பித்துள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய தோல்வியடையும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
20ஆவது திருத்தத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்யப்படவேண்டும் என்ற விடயத்தில் ஏற்றுக் கொள்ள கூடியதாகவே உள்ளது. இருப்பினும் மக்கள் விடுதலை முன்னணியினர் தேவையற்ற விடயங்களினை 20ஆவது திருத்தத்தின் ஊடாக நிறை வேற்ற முனைவது பொருத்தமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்.
மக்கள் விடுலை முன்னணியினர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20ஆவது திருத்தம் ஒரு போதும் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ஆதரவினை பெறாது. ஏனென்றால் அது தற்போதைய அரசியல் தேவைகளை பூரணபடுத்துவதாக அமையாது. தேவையற்ற விடயங்களை மாத்திரமே மக்கள் விடுதலை முன்னணியினர் உள்ளடக்கியுள்ளனர்.
தற்போது 20ஆவது திருத்தம் வாக்கெடுப்பு வருவதற்கு முன்னரே பல தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது பொதுஜன பெரமுனவின் 54 உறுப்பினர்களும், தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு போதும் மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கங்கள் நிறைவேறாது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய வேண்டும் என்ற விடயத்தினை ஆரம்பத்தில் லங்கா சமசமாஜ கட்சியினரே முன்வைத்தனர். இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்திடம் தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்து வந்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை மாத்திரம் இரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு யோசனைகளை முன்வைத்திருந்தால் ஆதரவு வழங்கியிருக்கலாம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினர் இவ்விடயத்தில் பல பொருத்தமற்ற விடயங்களை மறைமுகமாக நிறைவேற்ற சூழ்ச்சிகளை பிரயோகித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்கட்சியினர் என்ற பதவியில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் பங்காளி யாகவே செயற்படுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கங்களும் 20ஆவது திருத்தத்தில் மறைக்கப்பட்டுள்ளன. ஆகவே மக்கள் விடுதலை முன்னணியினருக்கு ஒரு போதும் ஆதரவு வழங்க முடியாது என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM