மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கபட்டவர்களை தங்கவைக்கபட்ட தற்காலிக இடங்களிலிருந்து வெளியேறுமாறு வழியுருத்தியமையால் தோட்டமக்கள் டயர் எரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பொகவந்தலாவ ரொப்கில் கீழ் பிரிவு தோட்டத்தில் மணி சரிவில் பாதிக்கபட்ட மூன்று குடியிருப்பாளர்களை சேர்ந்த 15பேரை தற்காலிகமாக தங்கவைக்கபட்டிருந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தோட்ட நிர்வாகம் வழி யுருத்தியமைக்கும் பாதிக்கபட்டவர்களுக்கு பணிநிறுத்தபட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை தொழிலுக்கு செல்லாது தோட்ட கொழுந்து மடுவத்திற்கு அருகாமையில் டயர்களை எரித்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த மண்சரிவு அபாயம் காரணமாக 2017ஆம் ஆண்டு குறித்த தோட்ட லயன் குடியிருப்பிலிருந்து மூன்று குடும்பங்களை சேர்ந்த 15பேர் அம்பகமுவ பிரதேச செயலாளர் காரியலத்தின் ஊடாக குறித்த மக்கள் வெளியேற்றபட்டு ரொப்கில் தமிழ் வித்தியாளயத்தின் ஆசிரியர்களின் விடுதியிலும், தோட்டஉத்தியோகத்தரின் விடுதிகளிலும் தங்கவைக்கபட்டதாகவும் தற் பொழுது ஒரு வருடமும் 03மாதங்கள் கடந்துள்ள போதும் தற்பொழுது தோட்டநிர்வாகம் பாதிக்கபட்ட மக்களை வெளியேற கோருவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
மண்சரிவும் கற்பாறைகளும் சரிந்து விழுந்த பகுதியில் நாங்கள் எவ்வாறு சிறு பிள்ளைகளை வைத்து கொண்டு வாழ்க்கை நடத்துவது எனவே பாதிக்கபட்ட மக்களுக்கு மாற்று நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு உரிய வீடுகளை அமைத்து தரு மாறும் எங்கள் பிரச்சினை குறித்து மலையக அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேரரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM