தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் தூத்துக்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களது படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது தமிழ் நாட்டு அரசே நீதிகேட்ட மக்களுக்கு துப்பாக்கி குண்டுகளா? மோடி எடப்பாடி அரசே தூத்துக்குடி கொலையாளிகளுக்கு தண்டணை என்ன? தூத்துக்குடிக்கு நியாயம் வழங்கு மோடியின் கையில் மக்களின் குருதி, மோடி எடப்பாடி ஆட்சியாளர்களே கொலையாளிகளுக்கு தண்டனை என்ன? உள்ளிட்ட பல்வேறு கோசங்களை போராட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM