கொக்கட்டிச்சோலையில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Published By: Priyatharshan

01 Jun, 2018 | 10:55 AM
image

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிலுள்ள விடுதிக்கல் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை  அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதிக்கல் கிராமவாசியான குழந்தைவேல் குருசாந்தராசா (வயது – 40) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தனது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை இவரது வீட்டில் யாரும் இல்லாதவாறு அமைதியாக இருந்ததால் அயலவர் இவரது வீட்டை வந்து பார்த்தபோது மேற்படி நபர் சடலமாக காணப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல கொக்கட்டிச்சோலை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், இம் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது பற்றியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15