(இராஜதுரை ஹஷான்)
தென் மாகாணத்தில் பரவி வரும் இன்புளுவன்சா நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.
இன்புளுவன்சா வைரஸ் காரணமாக பரவும் நோய் தொற்று தென் மாகாணம் மற்றும் ஏனைய அருகிலுள்ள பிரதேசங்களுக்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் அப் பிரதேச வைத்தியசாலைகளுக்கு தாமதிக்காமல் வழங்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வைரஸ் காய்ச்சல் இரண்டு வயதிற்கும் உட்பட்ட குழந்தைகளுக்கு இலகுவில் பரவக் கூடிய என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இது வரையில் 8 சிறார்கள் மரணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளை வைரஸினை முற்றாக அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அதனை மட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இக் காய்ச்சல் இலகுவில் பரவக் கூடிய குழந்தைகள், கர்பிணித்தாய்மார், பாலூட்டும் தாய்மார், 65 வயதிற்கு மேட்பட்டோர், காச நோயுடையவர்கள் ஆகியோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM