ரஜினியின் கருத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு

Published By: Daya

01 Jun, 2018 | 08:17 AM
image

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் மர்மயோகி என்ற பெயரில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

• வி‌ஷக்கிருமிகளான சமூக விரோதிகளை புரட்சித்தலைவி அம்மா ஒடுக்கி வைத்திருந்தார்.

• ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்ததால்தான் அது கலவரமாக மாறியது.

• ஒருவர் இராஜினாமா செய்வதால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிட்டிவிடாது.

• நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டுமே தவிர எல்லாவற்றிற்கும் போராட்டம் நடத்தக்கூடாது என்றார் ரஜினிகாந்த்.

 ரஜினிகாந்த் மேலும் தெரிவித்ததாவது,

வி‌ஷக்கிருமிகளான சமூக விரோதிகளை, கழக அரசுதான், அடக்கி ஒடுக்கியது என்பதை மனந்திறந்து பாராட்டியிருப்பதோடு, சட்டத்திற்கு முன்பு சந்தன கடத்தல் வீரப்பனானாலும், சங்கராச்சாரியார் ஆனாலும் ஒன்றுதான் என்பதை தனது இரும்புக்கரத்து நிர்வாகத்தால், நிரூபித்தவர் நமது இணையற்ற புரட்சித்தலைவி அம்மா என்பதை உளமார பாராட்டி இருக்கிறார் ரஜினிகாந்த்.

அது மட்டுமல்ல, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கலவரம் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எக்கருத்தை முன் வைத்தாரோ, அதனையே வழிமொழிந்து சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்ததால்தான் அது வன்முறை வெறியாட்டமாக வடிவம் எடுத்தது என்பதை ரஜினிகாந்தும் எடுத்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

குறிப்பாக, 99 நாளாக நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், அமைதி வழியில் நிகழ்ந்து வந்த நிலையில், 100ஆவது நாள் போராட்டத்தில் கீதாஜீவன் தலைமையில் தி.மு.க.வினர் உட்புகுந்ததற்குப் பிறகு தான், அமைதி வழிப் போராட்டம், கண்ணீர் புகைகுண்டு, துப்பாக்கிச் சூடு என களேபரமானது என்பதை கருக்கொண்டு பார்க்கிறபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கும் வி‌ஷக் கிருமிகளும், சமூக விரோதிகளும் தி.மு.க.வினர்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அது மட்டுமல்லாமல், ராஜினாமா என்பது பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்ற நெத்தியடி பதில் மூலம் பதவி பித்துப்பிடித்து அலைகிற ‘மாதிரி’ தலைவர்களுக்கு ரஜினிகாந்த் சரியாக வேப்பிலை அடித்திருக்கிறார்.

ஒரு அரசு, பதவிப் பிரமாணம் எடுத்து முடிப்பதற்கு முன்பாகவே, ராஜினாமா செய்... ராஜினாமா செய்... என்று எதற்கெடுத்தாலும் ஊளையிடுகிற எதிர்மறை சித்தாந்தவாதிகளான கம்யூனிஸ்டுகளுக்கும், ரஜினிகாந்தின் பதில் புத்தி உரைக்க புகட்டப்பட்ட மருந்துதான்.

 தூத்துக்குடிக்கு போன ரஜினிகாந்த், எப்பொழுதுமே வன்முறைக்கு எதிரான இயக்கம் அ.தி.மு.க. என்பதை வழிமொழிந்திருப்பதும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக விரோதிகள் யார் என்பதை “கருத்து ஜாடை” காட்டி அம்பலப்படுத்தி இருப்பதுமென மனச்சாட்சி குன்றாது, மக்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் பேசியிருப்பது வரவேற்கத்தக்கதே.’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை ரஜினிகாந்த்தை மறைமுகமாக எதிர்த்து வந்த அ.தி.மு.க.வினர் தற்போது புகழ்வதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24