அனுமதிப்பத்திரமின்றி பசு மாடுகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின்பேரில் நீதிமன்றத்தினால் பத்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சிறிய ரக கெப் வண்டியில் மறுநாள் மீண்டும் அனுமதிப்பத்திரமின்றி பசு மாடுகளை ஏற்றிச்சென்ற போது அந்த வண்டி ஏறாவூர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.
கரடியனாறு பிரதேசத்திலிருந்து இன்று மூன்று பசு மாடுகளை ஏற்றிக்கொண்டு செங்கலடி குறுக்கு வீதி வழியாக வந்துகொண்டிருந்த வாகனத்தை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
பொலிஸாருக்குக்கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து இச்சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அந்த வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக ஏறாவூர் பொலிஸ்- சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதை ஒழிப்புப்பிரிவு பொறுப்பதிகாரி எம்.பி.ஜி.ஜி.எஸ். சத்துரங்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM