உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Published By: Daya

31 May, 2018 | 08:44 AM
image

 இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையின் காரணமாக வருடாந்தம் 15 ஆயிரம் பேர் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 முதன்முதலில் புகையிலை எதிர்ப்பு தினம் ஏப்ரல் 7ஆம் திகதி, 1988ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனத்தின் 40ஆவது ஆண்டு விழாவின் போது கடைபிடிக்கப்பட்டது. பின்னர், ஆண்டுதோறும் மே 31ஆம் திகதி புகையிலை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

குறித்த தினத்தில் நிகழ்ச்சிகளும், வலியுறுத்தல்களும், மக்களை புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்கவோ, அல்லது முற்றிலுமாக விட்டுவிடவோ, ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது.

 புகையிலை சிகரெட், பீடி, குட்கா, மூக்குப்பொடி, போன்றப் பல வகைகளில் உட்கொள்ளப்படுகிறது.   

மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், நாட்பட்ட இருமல் மற்றும் பல ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக புகையிலை உட்கொள்ளுதல் அமைகிறது.

புகையிலைப் பழக்கத்திலிருப்பவர்களை சிறந்த முறையில் மீட்டு, புகையிலைக்கு எதிரானப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.

புகையிலை பாவனையிலிருந்து இதயத்தை பாதுகாக்க, இதயபூர்வமாக செயற்படுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வருடத்துக்கான புகையிலை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

 புகையிலை உற்பத்திப் பொருட்களை பாவிப்பதன் மூலம், மனிதனது ஆயுட்காலம் 10 ஆண்டுகளால் குறைவடைவதாக உலக சுகாதார ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.

 அத்துடன் இதன் காரணமாக வருடாந்தம் உலகம் முழுவுதும் 7 மில்லியன் பேர் மரணிக்கின்றனர்.

 2030ஆம் ஆண்டாகும் போது இந்த மரண வீதம் 8 மில்லியனாக அதிகரிக்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08