தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முதன் முறையாக மக்கள் பிரச்சினைக்காக களமிறங்கிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இன்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் படுகாயமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து,
"தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிமாகி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் சமூக விரோதிகள் கலவரத்தை ஏற்படுத்தினர். தற்போது இந்த தூத்துக்குடி போராட்டத்திலும் இவ்வாறே நடந்துள்ளது.
சில போராட்டங்கள் தூண்டப்படுகின்றன, ஆனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பதவி விலகல் தீர்வாகாது. தூப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தனி நபர் விசாரணை மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
ஜெயலலிதாவின் ஆட்சியின் போது சமூக விரோத செயல்களை அவர் எவ்வாறு இரும்புகரம் கொண்டு ஒடுக்கினாரோ அவரது பெயரில் நடக்கும் ஆட்சியும் அவ்வாறே செயல்பட வேண்டும்.
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாவும் நிதியுதவி வழங்கப்படும்." என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM