சிறையில் தீவிரவாதமயப்படுத்தப்பட்ட நபரே பெல்ஜியத்தில் பொலிஸாரை சுட்டுக்கொன்றவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிக்கு 36 வயது என தெரிவித்துள்ள அதிகாரிகள் போதைப்பொருள் உட்பட சிறிய குற்றங்களிற்காக சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் அவர் திங்கட்கிழமையே சிறையிலிருந்து விடுதலையானார் எனவும் தெரிவித்துள்ளனர்.
சிறையிலிருந்த வேளை அவர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் பின்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் அதன் காரணமாக அவர் எங்களின் கண்காணிப்பு பட்டியலில் காணப்பட்டார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அவரது இலக்கு பொலிஸாரே என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சிறிய குற்றங்களிற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சிறைகளில் தீவிரவாதமயப்படுத்தப்படுவது ஐரோப்பாவில் அதிகரித்து வருவதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கத்திகள் போன்ற சிறிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்ட பலர் சிறைகளில் இருந்தவேளை தீவிரவாதமயப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறிப்பிட்ட நபர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு முன்னர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டார் என பெல்ஜிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர் தங்கியிருந்த அறையில் குரானும் தொழுகைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM