படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
குறித்த படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டபோதிலும் கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் 14வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளபோதிலும் இதுவரையில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடவியலாளர்களின் படுகொலை தொடர்பில் உண்மையான முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனைகளை வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கவேண்டும் என்ற மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
நாளை 31ஆம் திகதி பிற்பகல் 3.00மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இந்த நினைவு தின நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
நினைவேந்தல் நிகழ்வினையடுத்து யாழில் பிரதேச ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தினை இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM