(இராஜதுரை ஹஷான்)
நாடு தொடர்ந்தும் அரசியல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதற்கான காரணம் தேசிய அரசாங்கமானது மக்களின் நலன் குறித்து சிந்திக்காது கட்சிகளின் தனிப்பட்ட கொள்கைகள் முன்னிலைப்படுத்தி செயற்படுவதேயாகும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவத்தார்.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கமானது தொடர்ந்து அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. கட்சிகளின் தனிப்பட்ட கொள்கைகளை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றதே தவிர நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை.
தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் வெளிப்படும்போது கடந்த அரசாங்கத்தில் சகல துறைகளிலும் இடம்பெற்ற ஊழல்கள் யாவும் மறைக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே எதிரணியினர் இந்த விடயங்களை தமக்கு சாதககமாக பயன்படுத்தி எம்மீது குறை கூறி வருகின்றனர்.
ஊழல் குற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டனர். இதன் காரணமாகவே மக்களுக்கு இன்று தேசிய அரசாங்கத்தின் மீது அதிருப்தி தோன்றியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM