தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து. குறித்த தாக்குதலை மேற்கொண்ட பொலிஸார் மீது தாக்குதல் நடத்த குழுவொன்று திட்மிட்டுள்ளதாக உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் திகதி நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு மேற்கொண்டதில் 13 பேர் பலியாகினர்.
இச் சம்பவத்தையடுத்து குறித்த தாக்குதலை மேற்கொண்ட பொலிஸார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள குழுவொன்று நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை கடல் வழியாக படகு மூலம் தூத்துக்குடிக்கு வரவழைத்து இருப்பதாகவும், வெடிகுண்டுகளை தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பொலிஸாரை தாக்க திட்டமிட்டுள்ள கும்பல் பற்றி ரகசிய விசாரணை மற்றும் கண்காணிப்பில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மர்மக்குழு தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கைப்பட்டுள்ள பகுதிகளில் பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM