சம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி மாற்று அணி 

Published By: Daya

30 May, 2018 | 10:07 AM
image

(ரொபட் அன்­டனி)

சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பேரைக்­கொண்ட மாற்று அணி­யினர் இன்று புதன்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தலை­மை­யி­லான  தமிழ்த் தேசி­யக்­கூட்ட­மைப்பை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த­வுள்­ளனர்.  

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் காலை 11.30 மணி­ய­ளவில் நடை­பெ­ற­வுள்ள இந்த சந்­திப்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுடன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் முக்­கிய கூட்­ட­மைப்பின் முக்­கிய பிர­தி­நி­திகள் சிலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். 

இதன்­போது நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலைமை மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள 20 ஆவது திருத்த சட்டம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மந்­த­க­தியை அடைந்­துள்­ளமை, தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு,  நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

இந்த விட­யங்கள் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யினர் தமது நிலைப்­பாட்டை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னிடம் தெரி­விக்­க­வுள்­ளனர். 

குறிப்­பாக  புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மிகவும் ஆர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. 

எனவே இது தொடர்பில்   சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரும்  கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­துடன் அடுத்­த­கட்­டத்தை நோக்கி இதனை நகர்த்த முடி­யுமா என்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளனர். 

 அது­மட்­டு­மன்றி   மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்த சட்டம் தொடர்­பிலும்   இதன்­போது  கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வி­ருக்­கி­றது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பு தொடர்பில்  சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி முக்­கி­யஸ்தர் டிலான் பெரேரா கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில்,

நாம்  அனைத்து அர­சியல் கட்­சி­க­ளையும் தொடர்ச்­சி­யாக சந்­தித்து வரு­கின்றோம். அந்த அடிப்­ப­டையில் இன்று சம்­பந்தன் தலை­மை­யி­லான  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரை சந்­தித்து பேச்சு நடத்­த­வி­ருக்­கின்றோம். இதன்­போது  புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம்   13ஆவது  திருத்த சட்டம்  மற்றும்   அர­சியல் தீர்வு  தேர்தல் முறை மாற்றம், என்­பன தொடர்பில் எமது 16 பேரின் நிலைப்­பாட்டை தெளி­வாக  சம்­பந்­த­னிடம் எடுத்­து­ரைப்போம். 

நாங்கள் 16 பேரும் தொடர்ந்து சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்­துதான் செயற்­ப­டு­கின்றோம் என்­பதை அவ­ருக்கு   விளக்­கிக்­கூ­றுவோம்.  அதே­போன்று  எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னிடம் நாங்கள் கேட்­க­வேண்­டிய  சில கேள்­விகள் இருக்­கின்­றன. அதா­வது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தமிழ் மக்­களின்  பிரச்­சி­னை­களைத்  தீர்ப்­பது முக்­கி­யமா?

 அல்லது    ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் வைத்திருப்பது முக்கியமா  என்று  நாங்கள் சம்பந்தனிடம்  கேள்வி எழுப்ப இருக்கின்றோம்.   அந்தக்கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என்றும் எதிர்பார்க்கின்றோம். ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பு   இடம்பெறும் என்று  நாங்கள் நம்புகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40