(எஸ்.ஜே.பிரசாத்)
இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் வடக்கு – கிழக்கு பிரீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடர் இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் முதல் தடவையாக அதிகூடிய பணப்பரிசை வழங்கவுள்ள வடக்கு – கிழக்கு பிரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று மாலை பிரமாண்டமான ஆரம்ப விழாவுடன் தொடங்கவுள்ளது.
இப் போட்டியில் வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 12 அணிகள் பங்குபற்றவுள்ளன.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கால்பந்தாட்டக் கழகங்கள் பங்குபற்றுகின்றன.
இன்று ஆரம்பமாகும் தொடரின் முதல் போட்டியில் கிளியூர் கிங்ஸ் மற்றும் ட்ரிங்கோ டைட்டன்ஸ் ஆகிய கழக அணிகள் மோதுகின்றன.
இத் தொடரைப் பொறுத்தவரையில் இதில் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு உரிமையாளர் இருப்பார்.
ஒவ்வொரு அணியும் பிற மாவட்ட வீரர்களை அணியில் இணைத் துக்கொள்ளலாம். வெளிநாட்டு வீரர்களும் இத் தொடரில் விளையாடுகின்றனர்.
ஆனால் போட்டியின் போது அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நால்வரும் வடக்கு– கிழக்கைச் சேர்ந்த ஐவரும் குறைந்தபட்சம் இடம்பெறவேண்டும்.
பிறமாவட்டங்களைச் சேர்ந்த இருவர் மாத்திரமே ஒரே நேரத்தில் விளையாடலாம்.
அதன்படி வடக்கு - கிழக்கு பிரீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் கிளியூர் கிங்ஸ், மாத்தோட்டம் எவ்.சி., நோர்தன்ஸ் எலைட், வவுனியா வோரியர்ஸ், முல்லை பீனிக்ஸ், அம்பாறை எவஞ்சர்ஸ், ட்ரிங்கோ டைடன்ஸ், டில்கோ கொங்கரர்ஸ், மன்னார் எவ்.சி., வல்வை எவ்.சி. மற்றும் மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளே மோதவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM