ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு போராட்டக்காரர்களையும் எதிர்கட்சிகளையும் திசைதிருப்பும் தந்திரோபாயம் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அதற்கான உரிய காரணங்களை வெளியிடாமல் அரச ஆணையை மாத்திரம் வெளியிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவிற்கு அனுமதி வழங்குவதாக மாத்திரம் தமிழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. வேறு காரணங்களை அது முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் எளிதாக நீதிமன்றத்தில் அனுமதியை பெற்றுவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தமிழக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு போராட்டக்காரர்களையும் எதிர்கட்சிகளையும் திசைதிருப்பும் தந்திரோபாயமா என்ற சந்தேகம் எழுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM