(எஸ்.ஜே.பிரசாத்)
காலியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நடந்ததாக சொல்லப்படும் ஆடுகள நிர்ணய சூதாட்டம் குறித்து விசாரிக்கும் தேவை எமக்கு இல்லை என்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
காரணம் அப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. அதனால் எமக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
அல் – ஜசீரா வெளியிட்ட குறித்த காணொளியில் இடம்பெற்றிருந்த இலங்கையைச் சேர்ந்த நால்வரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் சூதாட்டம் எப்படி நடைபெறுகின்றது. இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த இரகசிய ஆய்வொன்றை பிரபல செய்தி நிறுவனமான அல் – ஜசீரா செய்திருந்தது.
இந்த ஆய்வால் கிரிக்கெட் உலகமும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அதில் ஆட்ட நிர்ணயம் மற்றும் ஆடுகள நிர்ணயம் குறித்து பல இரகசியங்கள் அம்பலமாயின.
அதில் குறிப்பாக இலங்கையின் காலி மைதானத்தில் நடைபெற்ற ஆஸி. மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் ஆடுகளத்தை புக்கிகளின் ஆலோசனைப்படி மாற்றியமைத்தமை அம்பலமானது. அக் காணொளியில் தோன்றும் காலி மைதானத்தின் ஆடுகள பராமரிப்பாளர்களே இதற்கு சாட்சி.
இந்நிலையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையின் தரிந்து மெண்டிஸ், தரங்க இந்திக்க, குலதுங்க மற்றும் டில்ஹார லொக்கு ஹெட்டிகே ஆகியோர் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
அத்தோடு ஐ.சி.சி. நடத்தும் விசாரணைகளுக்கு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு இது குறித்து விசாரணை நடத்துமாறு புலனாய்வுப் பிரிவுக்கு முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை குறித்த காணொளியில் சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவையும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM