சட்ட விரோதமான முறையில் உள்ளாடையில் மறைத்து இரண்டு தங்க பிஸ்கட்டை இலங்கைக்கு கடத்திவர முயன்ற இலங்கை பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்
இன்று அதிகாலை 1.55 மணியளவில் சிங்கப்பூலிருந்திருந்து கட்டுநாயக்கா ஈ.கே. 348 என்ற விமானம் மூலம் குறித்த நபர் இலங்கைக்கு வந்துள்ளார்.
சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து சுமார் 13, 60,000 ரூபா பெறுமதியான 200 கிராம் தங்க பிஸ்கட்களை மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் கொழும்பிலிருந்து வெள்ளம் பிட்டி பகுதியில் வசிக்கும் 26 வயதான நபரே என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த தங்க பிஸ்கட் பரிமுதல் செய்யப்பட்டதோடு, ஒரு கோடி தண்ட பணம் அறவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து எம்.சபீர் அதிகாரின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM