அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெப்பமண்டல புயலினால் அப்பிரதேசத்தில் வசித்துவந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தோன்றியுள்ள அல்பெர்டோ என்ற சூறாவளி மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதுடன் பலத்த மழையும் பெய்து வருகின்றது.
இந்த அல்பெர்டோ புயல் வடக்கு நோக்கி நகரும்போது வலுவடைந்துக் கொண்டு செல்வதால் வெள்ளம் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதாக மியாமி புயலாய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலின் காரணமாக மேற்கு ஜோர்ஜியா பகுதியில் சுமார் 30 சென்றிமீட்டர் அளவில் மழைவிழ்ச்சியும், தாழ்வான பகுதிகளில் 60 தொடக்கம் 120 சென்றிமீட்டர் மழைவிழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புயலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு. மீட்பு, நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM