தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான நல்லாட்சி கூட்டு அரசாங்கத்தை மலர் மெத்தையின் மீதிருந்தவாறு உருவாக்கவில்லை. மாறாக பல்வேறுப்பட்ட சவால்களிற்கு முகங்கொடுத்து, ஏன் உயிர் தியாகங்களைச் செய்தே இவ்வெற்றியை ஈட்டிக்கொண்டோம். பல்வேறுபட்ட சவால்களிற்கு மத்தியில் நாங்கள் கட்டியெழுப்பிய நல்லாட்சியினை சீர்குலைக்க ஒருவருக்கும் சந்தர்ப்பம் வழங்கக்கூடாதென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமாகிய அர்ஜுன ரணதுங்க விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
2016–-2018 கிரிக்கெட் தேர்தல்களின் பொழுது விளையாட்டு அத்தியட்சகரின் முறையற்ற செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத தேர்தல் தொடர்பாக, எனும் தலைப்பின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கிரிக்கெட் தேர்தலின்போது விளையாட்டு அத்தியட்சகரின் செயற்பாடுகளிற்கு சவால் விடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற ஒவ்வொரு விசாரணைகளிலும் சாட்சி வழங்குவதற்கு தான் ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்தியட்சரின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக கிரிக்கெட் தேர்தல்களின் மாத்திரம் குழப்பநிலை தோன்றவில்லை. மாறாக பூப்பந்து, ஹொக்கி, வொலிபோல், ரக்பி, சைக்கிள் மற்றும் உடற்தகுதிகாண் போன்ற தேர்தல்களிலும் பல குழப்ப நிலைமைகள் தோன்றியுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இவ்வாறானதோர் நிலையினை நாங்கள் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. ஊழல் மோசடிக்காரர்களை பாதுகாப்பதற்கு ஒரு போதும் முயற்சிக்க வேண்டாமென நான் உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். தேர்தல்களை நடாத்தும் பொழுது விளையாட்டு அத்தியட்சருக்கெதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் சுயாதீனமான குழுவொன்றினை நியமித்து முறையான விசாரணையொன்றினை முன்னெடுப்பது துறைச்சார் அமைச்சராகிய உங்களது கடமையாகும். தாங்கள் ஊழல் மோசடிக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுகின்றமையினாலா இவ்விடயம் தொடர்பில் இன்னமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை?
தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான நல்லாட்சி கூட்டு அரசாங்கத்தை மலர் மெத்தையின் மீதிருந்தவாறு உருவாக்கவில்லை. மாறாக பல்வேறுப்பட்ட சவால்களிற்கு முகங்கொடுத்து, ஏன் உயிர் தியாகங்களைச் செய்தே இவ்வெற்றியை ஈட்டிக்கொண்டோம். அன்று நாங்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டத்திற்கெதிராக நகைத்த ஒரு சிலர் இன்று எங்கள் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் மற்றும் உயரிய பதவிகளையும் பெற்றுக்கொண்டு நல்லாட்சியைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். தாங்கள் இவ்வாறானதோர் நிலைக்குச் செல்லாதிருக்குமாறு என்னுடன் நெருங்கி வேலைசெய்யும் சகோதர அமைச்சராகிய உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். திலங்க சுமதிபாலவின் அரசியல் வரலாறு தொடர்பாக மாத்திரம் விசாரித்து விசாரணையினை நிறைவு செய்யாது அவருடைய அரசியல் வரலாற்றினை மேலும் விசாரணை செய்து மனசாட்சிக்கு இணங்க செயற்படுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
விளையாட்டு ஒழுங்குவிதிகள் 16 (2) ஆம் பந்திக்கமைய எந்தவொரு தேர்தல்கள் மூலமாக தேசிய விளையாட்டுச் சங்கத்தின் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்ட பின்னர் தகுதியற்ற நபரென கருதப்படுமாயின் அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் பொறுப்பு விளையாட்டுத் துறை அமைச்சரைச் சாரும். இச்செயன்முறையினை அடிப்படையாகக் கொண்டு கிரிக்கெட் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் தகுதி நிலை தொடர்பாக ஆராயுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் கிரிக்கெட் தேர்தல்களின் பொழுது விளையாட்டு அத்தியட்சகரின் செயற்பாடுகள் தொடர்பாக முறையாக விசாரணையொன்றினை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
அவ்விசாரணையின் பொழுது சாட்சி வழங்குவதற்கு நான் தயாராகவே உள்ளேன். அவ்விசாரணைகளின் பொழுது விளையாட்டு அத்தியட்சகரின் செயற்பாடுகள் தவறென உறுதிப்படுத்தப்படுமாயின் அவற்றிற்கெதிராக சட்டத்திட்டங்களிற்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்குமாறும் தகுதியற்ற நபர்களை பணிநீக்கம் செய்யுமாறும் அநீதியிழைக்கப்பட்ட நபர்களுக்கு சாதாரணத்தை நிலைநாட்டுமாறும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். நல்லாட்சியை சீர்குலைக்கின்ற இச்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை அறிவூட்டுவது என்னுடைய கடமை என்பதனையும் இறுதியாக நான் உங்களிடம் கூறவிரும்புகின்றேன் என்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM