" பாதாள உலக கோஷ்டிகளை அரசாங்கமே பாதுகாக்கின்றது "

Published By: Vishnu

28 May, 2018 | 08:14 AM
image

(ஆர்.யசி)

எமது ஆட்சியில் கட்டுப்படுத்தப்பட்ட பாதாள உலக கோஷ்டிகளின் நடவடிக்கைகள் மீண்டும் இந்த நாட்டில் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அரசாங்கமே நாட்டை நாசமாக்குகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

எமது ஆட்சியல் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், இலங்கைக்குள் அந்நிய சக்திகளின் தலையீடுகள் தடுக்கப்பட்டமை என அனைத்தும் இன்று பலவீனப்படுத்தப்பட்டு நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 

கடந்த காலத்தில் எத்தனை கொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பார்த்தால் இந்த நாட்டின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பாதாள உலக கோஷ்டியினரை பாதுகாத்து அதன் மூலம் அரசாங்கத்தின் பலர் தமது வியாபாரங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதனால் எந்த தவறையும் இழைக்காத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுகினறனர். 

மேலும் பலர் வெளிநாடுகளிலிருந்து கொண்டே இன்று தீர்மானங்களை எடுத்து இவர்களை இயக்கி வருகின்றனர் என ‍பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பொலிஸ்மா அதிபருக்கு இவை தெரிந்தும் அவரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது அனைத்து வகையிலும் அரசியல் தலையீடுகளே உள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59