வலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு!!!

Published By: Digital Desk 7

26 May, 2018 | 04:14 PM
image

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது. 

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஜே 233 கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட மாம்பிராய், மாங்கொல்லைப் பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவத்தினர் விடுவிக்கப்பட்ட பகுதிகளை தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு அடையாளப்படுத்தினார். அப்பகுதிக்கு விரைந்த மக்கள் தமது வீடுகளுக்கோ, ஒழுங்கைகளுக்கோ செல்ல முடியாத நிலையில்  பற்றைகள் மண்டிக் காணப்படுகிறது.  இராணுவத்தினர் பயன்படுத்திய தனியார் வீதியூடாகச் சென்று தமது காணிகளை பார்வையிட்டனர். 

இதேவேளை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையூடான மாங்கொல்லை காணி வீடுகள் விடுவிக்கப்படவில்லை அவை தொடர்ந்தும்  இராணுவத்தினரின் பாவனையிலேயே இருக்கின்றன. இதனால் காங்கேசன்துறை செல்லப்பிள்ளையார் கோயில் பின்பகுதியூடாகவோ, மாம்பிராய் உள் வீதியூடாகவோ விடுவிக்கப்பட்ட காணிக்குள் போக முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் விடுவிக்கப்பட்ட  தமது சொந்த காணிகளை துப்புரவு செய்து மீள்குடியேறுவதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச செயலக மீள்குடியேற்ற செயலணி அதிகாரிகள் தமக்கு உதவி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09