உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தமையையடுத்து இலங்கை மக்களுக்கும் குறித்த நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி விரைவில் எரிபொருளின் விலையை குறைத்து நிவாரணம் வழங்குவோம் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
ஏற்கனவே எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையினால் மக்கள் எல்லையற்ற கடன் பாரத்தை சுமக்க வேண்டியேற்பபட்டது. இவ்வாறான சிக்கல் நிலைமைக்கு இடமளிக்காமல் நிரந்தர தீர்வினை வழங்குவோம். மேலும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ், மிஹின் லங்கா மற்றும் மின்சார சபை ஆகிய நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் பணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் சந்திம வீரக்கொடி மேலும் குறிப்பிடுகையில்,
உலக சந்தையில எரிபொருள் விலை குறைந்தமைக்காக இலங்கையில் பெற்றோலின் விலையை குறைப்பதற்கு இயலாது. ஏற்கனவே எரிபொருளின் விலையை பெருமளவில் குறைத்தமையினால் நாட்டில் டொலர் பெறுமதி குறைவடைந்தது. மேலும் மக்கள் பெரும் கடன் சுமையை சுமக்க வேண்டியேற்பட்டது.
தற்போதைக்கு 30 டொலரில் பீப்பாய் இலங்கை வருகை தந்த போதிலும் குறித்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதில் பல சிக்கல் நிலை காணப்படுகின்றது. ஏற்கனவே எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையினால் மக்கள் எல்லையற்ற கடன் பாரத்தை சுமக்க வேண்டியேற்பபட்டது.
இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் 20 பில்லியன் ரூபாவும், மிஹின் லங்கா 5 பில்லியன் ரூபாவும் வழங்க வேண்டியுள்ளது. அதேபோன்று இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து பில்லியன் கணக்கில் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இவற்றில் மாதாந்த வட்டியே செலுத்தப்பட்டு வருகின்றது
ஆகவே உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தமையையடுத்து இலங்கை மக்களுக்கும் குறித்த நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி விரைவில் எரிபொருளின் விலையை குறை
த்து நிவாரணம் வழங்குவோம். இது
தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார் த்தை நடத்தியதன் பின்னர் நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM