நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியில் தொற்றுநோய்களைத் தடுக்க பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வயிற்றோற்றம் முதலான நோய்களைத் தவிர்ப்பதற்காக கொதித்தாறிய நீரைப் பருகுமாறு தொற்றுநோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் பபா பலிஹவதன தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக சுவாசம் சார்ந்த நோய்கள் மற்றும் எலிக் காய்ச்சல் என்பன பரவும் அபாயம் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.
வெள்ளநீர் உட்புகுவதனால் கிணறுகள் அசுத்தமடைந்துள்ளன.
எனவே, சுத்தமான குடிநீரையோ அல்லது கொதித்தாறிய நீரையோ பருக வேண்டும்.
ஏனெனில், நீரின் மூலம் நோய்கள் பரவும் நிலைமையே அதிகளவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் தடிமன் உள்ளிட்ட நோய் நிலைமைகள் ஏற்படுமாயின் உடனடியானக வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தொற்றுநோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் பபா பலிஹவதன தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM