தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருப்பதாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...
‘தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவம் எங்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது. ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்காக ஓட்டு போட்ட மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இனிமேல் எதிர்காலத்தில் எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காக காவல்துறையால் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை மத்திய-மாநில அரசுகளை கண்டித்து இம்மாதம் 26-ஆம் திகதியன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
தமிழ் கலை, இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இதற்காக பொலீஸ் அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளோம். தமிழ் உணர்வுள்ளவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.’என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM