சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன திடீர் சுகவீனமுற்ற நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு தனி யார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.
திடீர் இருதய வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவை உத்தரவிற்கமைய இன்று காலை மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்னவுக்கு நேற்று மாலை திடீரென இருதய வலி ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் மேலதிக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து விடயம் தொடர்பில் ஆஸ்திரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக ஆலோசனைகளை வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரின் மேலதிக சிகிச்சைக்கென அவரை உடனடியாக சிங்கபூருக்கு அழைத்து செல்லுமாறு உத்தரவு பிரப்பித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய இன்று அமைச்சர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM