தேசிய அரசாங்கம் மக்களுக்காகவா? அல்லது மாபியாவுக்காகவா?- விமல் கேள்வி 

Published By: Vishnu

25 May, 2018 | 03:51 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

தேசிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளானது மக்களுக்காக அமைந்துள்ளதா? அல்லது தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்த நிறுவனங்கள், மாபியாக்காரர்களை  திருப்திப்படுத்துவதற்காக அமைந்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவுள்ளது என்று கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில்  இன்று வெள்ளிக்கிழமை நிதி அமைச்சின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது இருந்த கடன்களை விடவும் 40 வீதக் கடன் கடந்த மூன்று ஆண்டுகளில் உயர்வடைந்துள்ளது. சகல பக்கமும் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், சாதாராண நடுத்தர மக்கள் என அனைவரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டு வியாபாரிகளுக்கும், கறுப்புப்பண கொள்ளையர்களுக்கும் மட்டுமே அரசாங்கம் பூரண சுதந்திரம் கொடுத்துள்ளது. 

புதிய லிபரல் வாதக் கொள்கையில் இந்த அரசாங்கம் பயணித்துக்கொண்டுள்ளது. புதிய சட்டங்கள் கொண்டுவந்து வெளிநாட்டு கொள்ளைக்காரர்களுக்கு சுதந்திர வியாபார நடவடிக்கைகளுக்கு இடம்கொடுத்து வருகின்றது. மத்திய வங்கி சட்டங்களை மாற்றி வெளிநாட்டு கறுப்புப்பணங்களை இலங்கையில் தூய்மையாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இவர்களது பொருளாதாரக் கொள்கைகளானது மக்களுக்காக அமைந்துள்ளதா அல்லது தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்த நிறுவனங்கள், மாபியாக்காரர்களை  திருப்திப்படுத்துவதற்காக அமைந்துள்ளதாக என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24