இந்திய வைத்தியர்கள் இலங்கையில்  மருத்துவ தொழில் செய்ய முடியாது  :   அரசாங்கம்  

Published By: MD.Lucias

19 Feb, 2016 | 11:19 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

எட்கா என்றழைக்கப்படும் இந்தியாவுடனான  பொருளாதார மற்றும் கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றன. இது ஒரு உடன்படிக்கையல்ல. கைச்சாத்திடவுள்ள ஒப்பந்தில் காணப்படும் குறை நிறைகள் குறித்து ஆராயும்  ஆரம்ப கட்ட நடவடிக்கையாகும். இதனால் இந்தியாவிலுள்ள வைத்தியர்கள் இலங்கைக்கு வந்து தொழில் புரியப்போவதில்லை. நாட்டுக்கு முரணான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் பலவந்தமாக மக்கள் மத்தியில் திணிக்காது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார்.

முன்னைய ஆட்சியின் போது ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக எமது பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருமானம் ஈட்டிக்கொண்டனர். எமது அரசாங்கத்தில் அவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது. சர்வதேச நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திட்டு ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க முடியாவிடின் இலங்கையின் எதிர்காலம் கேள்விகுறியதாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் பீட்சா, கே.எப். சி போன்ற உணவகங்களில் தொலைபேசியில் அழைத்தவுடன் வீட்டு சாப்பாடு நொடி .பொழுதில் வந்து சேர்கின்றன. எனினும் அம்பியூலன்ஸ் சேவை மிகவும் மோசமாக காணப்படுகின்றது. வாகன நெரிசலில் சிக்குண்டு முச்சக்கர வண்டியிலேயே எம்மவர்களின் உயிர் பிரிகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவுடன் செய்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படும்  பொருளாதார மற்றும் கூட்டுறவு (எட்கா) ஒப்பந்தம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே   பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18