வவுனியாவில் இன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் 4கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் கேரளா கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக போதை ஒழிப்புப்பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட பொலிசார் யாழ்ப்பாணம் தாளையடியைச் சேர்ந்த கணேசலிங்கம் கோகிலம் 44 வயதுடைய பெண் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து 4கிலோ 62கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும், குறித்த கஞ்சாவினை ஹொறவப்பொத்தான பகுதியில் நபர் ஒருவருக்கு வழங்குவதற்கு எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM