பற்றீசில் ஆணி ......

Published By: Digital Desk 7

24 May, 2018 | 04:04 PM
image

மன்னாரில் தள்ளு வண்டியில் விற்கப்பட்ட  'பற்றீசில்' துருப்பிடித்த ஆணி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் உரிய ஆதாரங்களுடன் முறையிட்டும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மன்னார் செபஸ்ரியார் பேராலய பிரதான வீதியில் கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை இரவு தள்ளு வண்டியில் விற்கப்பட்ட உணவான பற்றீஸ்களை மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொள்வனவு செய்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

அன்றைய தினம் இரவு 9.30 மணியளவில் குறித்த பற்றீஸ்களை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.

இதன் போது கொள்வனவு செய்யப்பட்ட  'பற்றீஸ்' ஒன்றில் இருந்து துருப்பிடித்த ஆணி ஒன்று இருந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மறு நாள் 19 ஆம் திகதி ஆதாரம் மற்றும் எழுத்து மூலம் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பாதிக்கப்பட்டவர் செய்துள்ளார்.

முறைப்பாடு செய்தும்  இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என குறித்த நபர் விசனம் தெரிவிக்கின்றார்.

"என்னை அழைத்து எவ்வித விளக்கமும் கேட்கவில்லை" என தெரிவித்த குறித்த நபர் தொடர்ச்சியாக அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளும் பட்சத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கும் எனவும், இதனால் மக்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31