வவுனியா மாண­வி துஷ்பிரயோகத்தின் பின்னரே   14வயது சிறுமி படுகொலை

Published By: MD.Lucias

19 Feb, 2016 | 11:01 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வவுனியா, உக்குளாங்குளம்,3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் மரணம் பாலியல் பலாத்காரத்தின் பின்னர் இடம்பெற்ற கொலை என தெரியவந்துள்ளது. 

வவுனியா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சட்ட வைத்திய பரிசோதனையிலேயே இது குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களைத் தேடி விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

குறித்த சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெறித்து கொலைச் செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார். 

வவுனியாவில்   வயது 14  மாணவி ஒருவர் கடந்த செவ்வாய்கிழமை தனது வீட்டில் தூக்கில் தொங்கியிருந்த நிலையில் சடலமாக பிற்பகல் 2.15 மணியளவில் மீட்கப்பட்டார். தாயார் வேலைக்கும், சகோதரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை 2.15 மணியளவில்  வீடு  வந்த  தாயார், சகோதாரர்கள் பாடசாலை முடிந்து வந்த போது கண்டனர்.  

இதனையடுத்து இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி காலை 7.15 இற்கும் பிற்பகல் 2.10 இற்கும் இடைப்பட்ட நேரத்திலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளதை அவதானித்த பொலிஸார் அதன் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என்பதை வைத்தும் மேலும் சில தடயங்களை வைத்தும் மரணத்தில் சந்தேகத்தை வெளியிட்டனர்.

இதனையடுத்தே சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

வவுனியா வைத்தியசாலை நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி கடமை நிமித்தம் கொழும்பு சென்றிருந்தமையால் நேற்று முன் தினம் வியாழக்கிழமையே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வவுனியா சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்திய நிபுணர் சமரவீரவினால் முன்னெடுக்கப்பட்ட இந்த சட்ட வைத்திய பரிசோதனைகளின் போது சிறுமி கடுமையாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெறித்து கொலைச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 "" அவர் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவரிடம் இருந்து தப்பிக்க  முயன்றுள்ளார்.இருப்பினும் வன்புணர்வின் பின் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  

இதனை விட வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி காணப்பட்டமையானது எமது சந்தேகத்தை ஆரம்பத்தில் வலுப்படுத்தியது. சந்தேக நபரிடம் இருந்து சிறுமி தப்பிக்க எடுத்த முயற்சிகளினால் இவ்வாறு வீட்டில் இருந்த பொருட்கள் சிதறியிருக்கக் கூடும். இந் நிலையில் இது குறித்து நாம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்.  இதற்கென விசாரணைகளை மேற்கொள்ள பிரத்தியேக குழுக்கள் இரண்டையும் அமைத்துள்ளோம்.' என விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

சிறுமியின் சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, சடலத்தை இறுதிக் கிரியையின் போது புதைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன்   மாணவியின் உடற்பாகங்கள் சில மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27