தூத்துக்குடியில் இடம்பெற்ற கலவரத்தினையடுத்து தூத்துக்குடியின் மாவட்டஆட்சியாளருக்கும் பொலிஸ் கண்காணிப்பாளருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 13 உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த துப்பாக்கி சூடு தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர் மற்றும் பொலிஸ் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் வெங்கடேஷ் மற்றும் பொலிஸ் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோரை இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு புதிய பொலிஸ் கண்காணிப்பாளராக நீலகிரி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM