வட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் இவ் வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவிக்கையில்
வட மாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவுகள் நீண்ட காலமாக வழங்கப்படாத நிலையில் நிலுவையில் காணப்பட்டது.
குறித்த பிரச்சினை தொடர்பாக வடமாகாண சுகதார அமைச்சு மத்திய அரசுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு பணிப்பகிஸ்கரிப்பும் இடம் பெற்றது.
எனினும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து இதற்கான நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் உரிய காலத்தில் கிடைக்கவில்லை.
-இந்த நிலையில் தற்போது மத்திய அரசாங்கத்தின் திறைசேரியில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் மாகாண திறைசேரிக்கு நிதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக மாகாண திறைசேரியில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குறிய நிலுவைகளை இந்த வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மாகாண திறைசேரியில் இருந்து இவ்வாரத்துக்குள் வைத்தியர்களுக்கான நிலுவையில் உள்ள மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய திறைசேரியினால் மாகாண திறைசேரிக்கு குறித்த பணம் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM