மடு திருத்தலத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்

Published By: Digital Desk 4

24 May, 2018 | 09:30 AM
image

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தலப் பகுதியில்  யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம் பெற்றது.

.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குறித்த உயர் மட்ட கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன்போது மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளைகிறிஸ்தவ மத விவகார அமைச்சின் பணிப்பாளர் எம்.குணவர்தனசுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர்இந்திய துணைத்தூதரகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் டி.சி.மஞ்சுநாத்மடு பிரதேசச் செயலாளர் வி.ஜெயகரன்மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொசன் குரூஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர்   இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம் பெற்ற குறித்த உயர் மட்ட கலந்துரையாடலின் போது இந்திய அராசங்கம் வழங்கும் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மடு திருத்தளத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு யாத்திரிகர்களுக்கான 300 தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 300 வீடுகள் அமைக்கப்படவுள்ள இடத்தினை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையிலான குறித்த குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இறுதியாக குறித்த வீட்டு திட்டம் அமைக்கும் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் அடுத்த மாதம் முதலாம் திகதி அடிக்கல் நாட்டி வீட்டுத்திட்டத்தை ஆம்பிப்பதாகவும்அதற்கான துரித நடவடிக்கைகளை உரிய திணைக்களங்கள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40