இலங்கைக்கும்  ருவாண்டாவிற்குமிடையில் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published By: Digital Desk 4

23 May, 2018 | 02:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மற்றும் ருவாண்டாவிற்குமிடையில் பாதுகாப்பு துறையில் இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை நடைமுறைப்படுத்த பாதுகாப்பு அமைச்சுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ருவாண்டா நாட்டுடனான பாதுகாப்பு துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தம் எமது நாட்டின் பாதுகாப்பு துறையில் செயற்படுத்த வேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் பரீசீலனைகளை மேற்கொள்ள கடந்த வாரம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன ருவாண்டா நாட்டிற்கு உத்தியோக பூர்வ அரச பயணத்தனை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பல எதிர்கால செயற்திட்டங்கள் மும்மொழியப்பட்டது. தற்போது எமது நாட்டில் நடைமுறையில் காணப்படுகின்ற பாதுகாப்பு திட்டங்களில் புதிய தொழினுட் முறைமைகளை உள்ளடக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ருவாண்டா நாட்டின் பாதுகாப்பு துறையில் காணப்படுகின்ற நவீன தொழினுட்ப உபாய முறைமைகள் அந்நாட்டு தேசிய நல பாதுகாப்பிற்கு பொருத்தமாகவே காணப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டில் இதுவரை காலமும் பின்பற்றி வருகின்ற தேசிய பாதுகாப்பு கொள்கை திட்டங்கள் மக்கள் மத்தியில் வேறுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு விடயத்தில் பல பிரச்சினைகள் கடந்த காலங்களில் தோற்றம் பெற்றுள்ளது.

ஆகவே இந்த அரசமுறை பயணத்தின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை எமது நாட்டு பாதுகாப்பு துறையிலும் செயற்படுத்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடுவது தொடர்பில் அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆகவே தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இரு நாட்டு பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு  தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை  ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் பாதுகாப்பு துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22