இலஞ்சம் பெற்ற மேல்மாகாண இறைவரித் திணைக்களத்தின் களுத்துறை பிரதேச அலுவலகத்தின் சிரேஷ்ட மதிப்பீட்டாளர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த அதிகாரி அலுவலக கட்டிடத்திற்குள்ளே 25000 ரூபா இலஞ்ச பணத்தை பெற்றுக்கொள்ளும் வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரியொருவர் விலைக்கு வாங்கிய காணி பத்திரத்திற்கான முத்திரை கட்டணத்தை குறைத்து அறவிடுவதற்காகவே குறித்த இலஞ்சப் பணம் சந்தேகநபரால் கோரப்பட்டுள்ளது.
கைது செய்த நபரை நேற்று இரவு களுத்துறை நீதவான் நீதமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM