பிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை

Published By: Priyatharshan

23 May, 2018 | 09:48 AM
image

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட இரு பிரிட்டனின் ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகள் சிலரை விசாரணை செய்து வருவதாக இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் இரவு விடுதியொன்றிற்கு சென்ற பின்னர் ரக்பி வீரர்கள் மரணமடைந்தது குறித்தே குற்றப்புலனாய்வு பிரிவினர்  முச்சக்கர வண்டி சாரதிகள் சிலரை விசாரணை செய்கின்றனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதிக்கு ரக்பி வீரர்கள் சென்று கொண்டிருந்த வேளை அவர்களிற்கு பிரவுண் சுகரை வழங்கிய முச்சக்கரவண்டி சாரதியை கைதுசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த இரு ரக்பி வீரர்களில் ஒருவரான தோமல் பட்டி தனது மரண வாக்குமூலத்தில் முக்சக்கரவண்டி சாரதி கொடுத்த பிரவுன் சுகரை தான் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல  முச்சக்கர வண்டி சாரதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15