(எம்.மனாசித்ரா)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அமலநாதன் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 19 மாவட்டங்கள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 10 ஆக உயர்வடைந்துள்ளது.
இந் நிலையில் 14432 குடும்பங்களைச் சேர்ந்த 52380 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 4075 குடும்பங்களைச் சேர்ந்த 12132 பேர் 137 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்ப்ட்டுள்ளனர்.
மேலும் சீரற்ற காலநிலை இன்றும் நாளையும் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM